மது 'பார்' ஆக மாறிய தாலுகா அலுவலகம்
அவினாசி தாலுகா அலுவலகம் சேவூர் ரோட்டில் உள்ளது. இந்த வளாகத்தில் கிளை சிறை, கோர்ட்டு ஆகியவை செயல்பட்டு வருகிறது. எனவே தினமும் பெண்கள் உள்பட ஏராளமானவர்கள் இங்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் இங்கு சிலர் மது குடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். தாலுகா அலுவலக வளாகத்தில் ஒரு சில நபர்கள் பட்டப்பகலிலேயே 'பார்' ஆக மாற்றி பகிரங்கமாக மது அருந்துகின்றனர். இதனால் பெண்கள் உள்ளிட்டோருக்கு இடையூறு ஏற்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் தாலுகா அலுவலகத்திற்குள் மது அருந்துபவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .
ஞானவேல்,அவினாசி.
9842286155