வேகத்தடைக்கு வர்ணம் பூச வேண்டும்

Update: 2023-03-29 11:42 GMT

ஏரல்- சாயர்புரம் மெயின் ரோடு பெட்ரோல் பங்க் அருகில் உள்ள வேகத்தடையில் வெள்ளைநிற வர்ணம் பூசப்படவில்லை. மேலும் அங்கு சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைகின்றனர். மேலும் அடிக்கடி விபத்துகளும் நிகழ்கின்றன. எனவே வேகத்தடையில் வர்ணம் பூசவும், சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்