கடலூர் அண்ணாபாலம் பகுதி சிக்னலில் அமைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் எழுத்துக்கள் அழிந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் புதிதாக கடலூருக்கு வரும் வாகன ஓட்டிகள் ஊர் பெயர் தெரியாமல் வெகுதூரம் சுற்றித்திரியும் நிலை உள்ளது. எனவே பெயர் பலகையை புதுப்பிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.