மலைபோல் குவியும் காய்கறி கழிவுகள்

Update: 2023-03-26 12:39 GMT

பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே நகராட்சிக்கு சொந்தமான தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த காய்கறி மார்க்கெட் முடிந்த பிறகு சேகரிக்கப்படும் காய்கறி கழிவுகள் உள்ளிட்டவை இப்பகுதியில் மலைபோல் குவிக்கப்பட்டு விடுகிறது. இதனை முறையாக அப்புறப்படுத்தாததால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்