தொற்று நோய் பரவும் அபாயம்

Update: 2023-03-26 11:01 GMT

நாகை வெளிப்பாளையம் ராமநாயக்ககுளத்தெரு பகுதியில் உள்ள சாலையோரத்தில் குப்பைகள் அதிகளவில் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும், குவிந்து கிடக்கும் குப்பைகளில் இரை தேடி கால்நடைகளும் அதிகளவில் வருகின்றன. இதன்காரணமாக போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.


மேலும் செய்திகள்