தெருநாய்கள் தொல்லை

Update: 2023-03-26 08:26 GMT

நெல்லை தச்சநல்லூர் சீனியப்பன் திருத்து, செல்வவிக்னேஷ்நகர் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. அவைகள் அந்த வழியாக செல்லும் பொதுமக்களை விரட்டுவதுடன் ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளையும் கடித்து குதறுகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்துடனே வெளியில் சென்று வருகின்றனர். எனவே பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றி திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்