புதிதாக கட்டப்பட்ட கால்வாய் சேதம்

Update: 2023-03-22 17:37 GMT
செஞ்சி-திருவண்ணாமலை செல்லும் சாலையில் சின்னப்பள்ளி வாசலில் சில தினங்களுக்கு முன்பு கழிவுநீர் கால்வாய் புதிதாக கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் கால்வாய் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதால், சேதமடைந்து விட்டது. இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள் தரமான கால்வாய் அமைக்க வேண்டும் என்று கோரி்க்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்