பொதுமக்களை அச்சுறுத்தும் குரங்குகள்

Update: 2023-03-22 17:36 GMT
சங்கராபுரம் அருகே பாக்கம்புதுர் கூட்டுரோடு பகுதியில் குரங்குகள் தொல்லை மிகவும் அதிகமாக உள்ளது. இவைகள் திறந்திருக்கும் வீடுகள், கடைகளுக்குள் புகுந்து பொருட்களை சூறையாடிச்செல்வதோடு, விரட்ட வரும் பொதுமக்களையும் கடிக்க பாய்கின்றன. குழந்தைகள் கையில் இருக்கும் தின்பண்டங்களையும் பிடுங்கி செல்கின்றன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே பொதுமக்களை அச்சுறுத்தி வரும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்