மாயன கொட்டகை அமைக்க கோரிக்கை

Update: 2023-03-22 12:34 GMT
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் மேற்கு ஒன்றியம் சிறுவயலூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பழைய விராலிப்பட்டி கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் இங்கு மாயான கொட்டகை அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தநிலையில் தமிழக அரசு மாயான கொட்டகை அமைக்க அனுமதி அளித்துள்ளது. ஆனால் பஞ்சாயத்து நிர்வாகம் இதுவரை அதற்கான எந்த முன்னேற்பாடு செய்யவில்லை. எனவே மாவட்ட கலெக்டர் தலையிட்டு உடனடியாக மாயான கொட்டகை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்