நடுவீரப்பட்டு அருகே நயினார்பேட்டையில் மழைநீர் வடிந்து செல்ல கால்வாய் அமைக்கப்பட்டது. இந்நிலையில் கால்வாயை கடந்து செல்ல ஏதுவாக சிறுபாலம் அமைக்கும் பணி சில ஆண்டுகளுக்கு முன்பாக நடைபெற்றது. இருப்பினும் பணிகள் முழுவதும் முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே சிறுபாலம் கட்டும் பணியை தொடங்கி, விரைந்து முடிக்க வேண்டும் என்பது அப்பகுதி பொதுமக்களின் எதிர்பார்பாக உள்ளது.