ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும்

Update: 2023-03-19 15:11 GMT

நாகை மாவட்டம் எரவாஞ்சேரி ஊராட்சி தேவன்குடி பெரிய குளத்தில் ஆகாயத்தாமரைகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் அந்த பகுதியில் உள்ள விளைநிலங்களுக்கு தண்ணீர் செல்வதில் தடை ஏற்படுகிறது. மேலும், ஆகாயத்தாமரைகள் அதிகம் உள்ளதால் பொதுமக்கள்குளத்து நீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெரிய குளத்தை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்