அரிசி ஆலைகள் இடம் மாற்றப்படுமா?

Update: 2023-03-19 14:33 GMT
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பேரூராட்சி வ.ஊ.சி. தெரு, குறிஞ்சிநகர், கண்ணகி தெரு, பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ளிட்ட பகுதிகளில் அரிசி ஆலைகள் இயங்கி வருகிறது. இதனை வேறு இடத்திற்கு மாற்றுவதற்காக பல்வேறு அமைப்புகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அதற்கான நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை. இந்த ஆலையில் இருந்து வெளியேரும் கழிவுநீர் மற்றும் சாம்பல், நெல் உமி போன்றவற்றால் இப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே, இந்த அரிசி ஆலைகளை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்