முள்வேலி அகற்றப்படுமா?

Update: 2023-03-19 13:54 GMT

திருவாரூர் தாலுகா காட்டூர் ஊராட்சி கலைஞர் அருங்காட்சியகம் அருகே குளம் ஒன்று உள்ளது. ஊராட்சிக்கு சொந்தமான இந்த குளம் முள்வேலி கொண்டு அடைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் குளத்தை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கோடை காலம் நெருங்கி வருவதால் கால்நடைகளும் தண்ணீர் குடிக்க குளத்துக்குள் செல்ல முடியாத நிலை உருவாகி உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள குளத்தில் கால்நடைகள் தண்ணீர் குடிப்பதற்கு வசதியாக முள்வேலியை அகற்றிட வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.



மேலும் செய்திகள்