பள்ளி செல்ல பேருந்து வசதி வேண்டும்

Update: 2023-03-19 06:28 GMT
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பராக்கிரமபாண்டி பஞ்சாயத்து சாமியாத்து கிராமத்தில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயின்று வருகின்றனர். ஆனால் சாமியாத்தில் இருந்து நேரடி பஸ் வசதி இல்லாததால் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆயத்துறைக்கு நடந்து சென்று, அங்கிருந்து ஸ்ரீவைகுண்டத்துக்கு பஸ் ஏறி செல்கின்றனர். எனவே சாமியாத்து- ஸ்ரீவைகுண்டம் இடையே காலை, மாலையில் அரசு டவுன் பஸ்கள் இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்