சுடுகாட்டிற்கு மேற்கூரை வேண்டும்

Update: 2022-07-20 17:09 GMT

புதுக்கோட்டை மாவட்டம், 9A நத்தம் பண்ணை ஊராட்சிக்கு உட்பட்ட ராசவயல் மற்றும் வடமலாப்பூர் ஆகிய பகுதிகளில் சுமார் 1000 குடும்பத்தின் வசித்து வருகின்றனர். பாலன் நகர் கிழக்கு-மேற்கு, ராசாவாயல் ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள், வயது முதிர்வின் காரணமாகவும் மற்றும் இயற்கை மரணங்கள் ஏற்பட்டாலும் ராசாவாயல் அருகே உள்ள திறந்த வெளி சுடுகாட்டிற்கும் மற்றும் வடமலாப்பூரில் உள்ள பொதுமக்கள் இறக்க நேர்ந்தால் வடமலாப்பூர் திறந்தவெளி சுடுகாட்டிற்கும் செல்ல வேண்டி உள்ளது . மேற்கண்ட இரு சுடுகாடுகளும் திறந்த வெளியில் பிணங்களை எரிப்பதால், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்பட்டு, பொது மக்களுக்கும் சுவாச கோளாறு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இரு திறந்த நிலையில் உள்ள சுடுகாட்டையும் பிணங்களை தகனம் செய்வதற்கு கட்டிடத்துடன் கூடிய சுடுகாடு அமைத்துக் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்