அங்கன்வாடி மையம் தூய்மை செய்யப்படுமா?

Update: 2023-03-15 14:17 GMT
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா ஓலைப்பாடி புதுகாலனி அங்கன்வாடி மையம் ஒன்று உள்ளது. அந்த மையத்தில் குழந்தைகள் பலர் படித்து வருகின்றனர். இந்தநிலையில் மையத்தை சுற்றி செடி, கொடிகள் முளைத்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. இதனால் மையத்திற்கு தங்கள் குழந்தைகளை அனுப்புவதற்கு பெற்றோர்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். எனவே மையத்தை தூய்மைப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்