பூட்டியே கிடக்கும் மகளிர் சுகாதார வளாகம்

Update: 2023-03-15 14:16 GMT
பெரம்பலூர் மாவட்டம், புது அம்மாபாளையம் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மகளிர் சுகாதார வளாகம் நீண்ட நாட்களாக பூட்டியே கிடக்கிறது. இதுகுறித்து பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கழிப்பிட வசதி இல்லாமல் பெண்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்