பெரம்பலூர் நகராட்சி 6-வது வார்டுக்கு உட்பட்ட புதிய மதனகோபாலபுரத்தில் உள்ள ரேஷன் கடையில் 1,700 குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் பொருட்கள் வாங்கி வருகின்றனர். இதில் வெங்கடேசபுரம் தெற்கு, சுந்தர் நகர், பாலக்கரை, வெங்கடாஜலபதி நகர், எம்.எம்.நகர், சிதம்பரம் நகர், சித்தர் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மெயின் ரோட்டை கடும் சிரமத்துடன் கடந்து ரேஷன் கடைக்கு வந்து ரேஷன் பொருட்களை வாங்கி செல்கின்றனர். எனவே அந்த குடும்ப அட்டைதாரர்கள் நலன் கருதி புதிய மதனகோபாலபுரத்தில் உள்ள ரேஷன் கடையை 2 ஆக பிரித்து 6-வது வார்டு பகுதியில் புதிய ரேஷன் கடை ஒன்று அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.