அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ள ஸ்ரீபுரந்தான் காலனி தெருவில் இருந்து செக்கடி பேருந்து நிலையம் வரை ஒரு கிலோ மீட்டர் நீளம் உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் காலனி மக்கள் தெருவில் நடந்து செல்லவே மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை செப்பனிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.