அரியலூர் பெரிய அரண்மனை தெருஅரண்மனை தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் ஏராளமான தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக இந்த பகுதியில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலைகளில் நடந்து செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகளை துரத்தி சென்று கடிக்க பாய்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.