தெருநாய் தொல்லை

Update: 2023-03-12 17:20 GMT

நாமக்கல் நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் 1½ லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் தெருநாய் தொல்லை இருந்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் செல்வோரை துரத்தி கடிக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ?

மேலும் செய்திகள்