சென்னை சூளைமேடு ஸ்ரீராமபுரம் ரேஷன் கடை அருகில் உள்ள மரத்தின் கிளைகள் படர்ந்து விரிந்துள்ளது. லாரி போன்ற கனரக வாகனங்கள் செல்லும்போது மரக்கிளைகள் உடைந்து கீழே விழுகின்றன. இது வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் இடையூறை ஏற்படுத்துகிறது. எனவே ஆபத்தான மரக்கிளைகளை வெட்டிவிட்டால் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.