மதுரை புது நத்தம் சாலை ரேஸ்கோர்ஸ் காலனியில் கலெக்டர் பங்களா முதல் தென்மண்டல காவல் துறை தலைவர் அலுவலகம் செல்லும் சாலையில் தெருவிளக்குகள் எரியாமல் உள்ளன. இரவு நேரங்களில் இருள்சூழ்ந்து காணப்படுவதால் சாலையில் நடக்க பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே தெருவிளக்குகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.