குடிமகன்கள் அட்டகாசம்

Update: 2023-03-12 14:55 GMT

பாகூர் அடுத்த மணமேடு கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. அதன் அருகில் மதுக்கடை உள்ளதால் மதுபிரியர்கள் மதுபானம் வாங்கி கொண்டு பாலத்தில் அமர்ந்து குடிக்கின்றனர். போதை தலைக்கேறியதும் மதுபாட்டில்களை அங்கேயே உடைத்து அட்டகாசம் செய்கின்றனர். மேலும் காசு வைத்து சூதாட்டமும் நடக்கிறது. இதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்