மது விற்பனையை தடுக்க வேண்டும்

Update: 2023-03-12 14:03 GMT
பெரம்பலூர் மாவட்டம், கூடலூர் பகுதியில் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெற்று வருகிறது. மேலும் மதுபிரியர்கள் குடித்து விட்டு பாட்டில்களை சாலையில் உடைத்து சென்று விடுகின்றனர். மேலும் மது விற்பனையால் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களும் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்