காட்சி பொருளாக ரேஷன்கடை கட்டிடம்

Update: 2023-03-12 11:55 GMT

நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி அம்மாகுளத்தங்கரையில் புதிதாக ரேஷன் கடை கட்டிடம் கட்டப்பட்டது. கட்டுமான பணிகள் முழுவதும் முடிவடைந்த நிலையில் இன்று வரைரேஷன் கடை பயன்பாட்டுக்கு வராமல் காட்சி பொருளாக உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து மேற்கண்ட பகுதியில் உள்ளரேஷன் கடை கட்டிடத்தை திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.


மேலும் செய்திகள்