விருத்தாசலம் தெற்கு பெரியார் நகரில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. இவை திறந்திருக்கும் வீடுகள், கடைகளுக்குள் புகுந்து பொருட்களை சூறையாடுவதோடு, விரட்ட வரும் பொதுமக்களையும் கடிக்க சீறிப்பாய்கின்றன. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.