தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2023-03-08 13:19 GMT
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகே குப்பை தொட்டியில் இருந்து குப்பைகள் அனைத்தும் அப்பகுதியில் உள்ள சாக்கடையில் விழுந்தது. இதனால் அடைப்பு ஏற்பட்டு சாக்கடை கழிவுநீர் தேங்கி நின்றது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளிப்பட்டது. இந்த செய்தியின் எதிரொலியாக சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தின் சாக்கடை அடைப்பை சரி செய்தனர். இதனால் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்