புகைமூட்டத்தால் சிரமம்

Update: 2023-03-08 07:28 GMT

ஈரோடு சோலார் நகராட்சி நகரில் உள்ள அங்கன்வாடி மையம் அருகே குப்பைகள் கொட்டப்பட்டு தினமும் தீ வைத்து எரிக்கப்படுகிறது. அதனால் அந்த பகுதி புகை மூட்டமாக காணப்படுகிறது. இதனால் அங்கன்வாடி மையங்களில் படிக்கும் குழந்தைகள் மற்றும் அருகே உள்ள வீடுகளில் வசித்து வருபவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். எனவே குப்பைகளை கொட்டி தீ வைத்து எரிப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி