தெருநாய்கள் தொல்லை

Update: 2023-03-05 17:35 GMT

புதுச்சேரி கடலூர் சாலையில் முதலியார்பேட்டை பகுதியில் இரவு நேரத்தில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன. அந்த வழியாக இரு சக்கர வாகனங்களில் செல்வோரை நாய்கள் துரத்துகின்றன. இதனால் சில நேரங்களில் நாய்களுக்கு பயந்து வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே அதனை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்