நிழற்குடை தேவை

Update: 2023-03-05 16:06 GMT

ஈரோடு ரெயில் நிலையத்தின் உள்பகுதியில் இருக்கும் பஸ் நிறுத்தத்தில் மாநகரப் பஸ்கள் மட்டுமே நின்று செல்கின்றன. சென்னிமலை, வெள்ளோடு போன்ற பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள், ரெயில் நிலையத்துக்கு வெளியிலேயே நின்று பயணிகளை ஏற்றி இறக்கி சென்று வருகின்றன. அங்கு நின்றிருந்த மரங்கள் வடிகால் பணிகளுக்காக ெவட்டப்பட்டுவிட்டன. இதனால் ரெயில் நிலையத்துக்கு வெளியே நிழல் இல்லாததால் வெயிலில் பஸ்களுக்காக பயணிகள் கால் கடுக்க காத்து நிற்க வேண்டிய நிலை உள்ளது. எனவே அங்கு நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்