ஆபத்தான மரம்

Update: 2023-03-05 07:32 GMT

கோவையை அடுத்த உருமாண்டம்பாளையம் ரெயில்வே கேட் அருகே பட்டுப்போன நிலையில் புளியமரம் ஒன்று நிற்கிறது. பலத்த காற்று வீசும்போது, அந்த மரம் சாய்ந்து விழும் அபாயம் நிலவுகிறது. அப்போது அந்த வழியாக செல்பவர்கள் விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் அதன் கிளைகள் உடைந்து, அந்த வழியாக செல்லும் மின்கம்பிகள் மீது விழுந்து உள்ளதால், மின் விபத்து ஏற்படலாம். எனவே ஆபத்தான அந்த மரத்தை வெட்டி அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்