காயல்பட்டினம் மெய்கண்ட சிவன் கோவிலுக்கு செல்லும் சாலை, தீவுத்தெரு தொடக்கப்பள்ளி முதல் அண்ணாநகர் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் அங்கு போதிய தெருவிளக்குகள் இல்லாததால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே அங்கு சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.