புகாருக்கு உடனடி தீர்வு

Update: 2023-03-01 12:44 GMT
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் முதலுதவி சிகிச்சை மையம், சித்த மருத்துவமனை அருகில் அமைக்கப்பட்ட தற்காலிக சிறுநீர் கழிப்பிடம் பக்தர்களுக்கு இடையூறாக உள்ளதாக மோகனசுந்தரம் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து சிறுநீர் கழிப்பிடம் அகற்றப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்