பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகாவில் உள்ள காலி இடங்களில் அதிக அளவில் கருவேல மரங்கள் முளைத்துள்ளன. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைவதுடன், இந்த செடியின் காய்களை தின்பதினால் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்த கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.