கோவை கூடலூர் நகராட்சி 1-வது வார்டு செல்வபுரம், கட்டாங்கிமலை அடிவாரத்தில் ஏழை, எளிய மக்கள் பலர் வசித்து வருகின்றனர். இவர்கள் மருத்துவ வசதி பெற 7 மைல் தூரம் உள்ள பெரியநாயக்கன்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு வர வேண்டிய நிலை உள்ளது. போக்குவரத்து வசதி அதிகம் இல்லாத நிலையில், நீண்ட தூரம் சென்று வருவதில் மிகவும் சிரமமாக உள்ளது. எனவே கட்டாங்கிமலை பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர அதிகாரிகள் முன்வர வேண்டும்.