மதுரை மாவட்டம் 23-வது வார்டு கீழகைலாசபுரம் தாகூர் நகர் கண்மாய்கரை பகுதியில் சுமார் 2 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆனால் இங்கே உள்ள ரேஷன் கடைக்கு சொந்த கட்டிடம் இல்லாததால் கடை வாடகை இடத்தில் செயல்பட்டு வருகிறது. எனவே இங்கு ரேஷன் கடைக்கு சொந்த கட்டிடம் கட்டி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.