தெருநாய்கள் தொல்லை

Update: 2023-02-26 12:43 GMT

கரூர் மாவட்டம், நன்செய் புகழூர் ஊராட்சி பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இந்த தெருநாய்கள் சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை கடிக்க துரத்துகிறது. இதனால் அவர்கள் பயத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் உள்ள ஆடுகள், கோழிகளை தெருநாய்கள் கடித்து குதறுகின்றன. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்