பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்

Update: 2023-02-26 12:02 GMT

கூடலூர் பழைய பஸ் நிலையத்துக்கு தினமும் காலை, மாலை நேரங்களில் ஏராளமான கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பயணிகள் வந்து பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர். ஆனால் நிழற்குடை இல்லாததால் வெயில் அல்லது மழையில் சிரமத்துடன் நின்று செல்கின்றனர். இதனால் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் இனிமேலாவது அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்