பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் வி.களத்தூர் வழி தேனூர் கிராமத்தில் கொசுத்தொல்லை அதிக அளவில் உள்ளது. இதனால் கூலி வேலைக்கு செல்பவர்கள் இரவு நேரத்தில் நிம்மதியாக தூங்க முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் கொசுக்கடியால் இப்பகுதியில் மர்ம காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் கொசு ஒழிப்பு மருந்து அடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.