திறந்தநிலையில் வடிகால் தொட்டி

Update: 2023-02-26 10:54 GMT

திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகே சாலையோரத்தில் குடிநீர் வடிகால் தொட்டி ஒன்று உள்ளது. இந்த தொட்டி மூடி இன்றி திறந்த நிலையில் ஆபத்தான பள்ளம் போல் காட்சி அளிக்கிறது. இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அதற்குள் விழுந்துவிடுகின்றனர். இதனால் தற்போது அந்த பகுதியில் தற்காலிகமாக இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. அவையும் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலே உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திறந்த நிலையில் உள்ள வடிகாலுக்கு மூடி அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.


மேலும் செய்திகள்