நாய்கள் தொல்லை

Update: 2023-02-26 10:53 GMT

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதி எம்.ஜி.ஆர்.நகரில் உள்ள அரசு பள்ளி அருகே தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை அந்த வழியாக நடந்து செல்லும் மாணவ-மாணவிகளை விரட்டி சென்று கடிக்கின்றன. இதனால் மாணவர்கள் பள்ளிக்கு அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும், நாய்கள் வாகனங்களை துரத்துவதால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?




மேலும் செய்திகள்