நாய்களுக்கு கருத்தடை செய்யப்படுமா?

Update: 2023-02-26 10:50 GMT

நாகை வெளிப்பாளையம், காளியம்மன் கோவில் தெரு, நாடார் தெரு உள்ளிட்ட பகுதியில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை துரத்தி சென்று கடிக்கின்றன. இதன்காரணமாக பொதுமக்கள் சாலையில் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும், நாளுக்கு நாள் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாய்களை பிடித்து செல்லவும், அவற்றுக்கு கருத்தடை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்


மேலும் செய்திகள்