திறக்கப்படாத கழிப்பிடம்

Update: 2023-02-26 08:22 GMT

கோவை மத்வராயபுரம் ஊராட்சி சிறுவாணி மெயின்ரோடு முண்டாந்துறையில் ரூ.5 லட்சம் செலவில் சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு பொது கழிப்பிடம் கட்டப்பட்டது. ஆனால் இதுவரை கழிப்பிடம் திறக்கப்படவில்லை. இதனால் தற்போது கழிப்பிட கட்டிடம் புதர் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் சுவர் மீது செடிகள் முளைக்க தொடங்கிவிட்டது. இதன் காரணமாக விரைவில் அந்த கட்டிடம் பாழடைந்த நிலைக்கு சென்றுவிடும். இதனால் அரசு பணம் வீணாக வாய்ப்பு உள்ளது. எனவே அந்த கழிப்பிடத்தை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும்.

மேலும் செய்திகள்