புகார் பெட்டி செய்தி எதிரொலி; வழிகாட்டு பலகை அமைப்பு

Update: 2023-02-26 08:14 GMT
சாத்தான்குளம் அருகே பன்னம்பாறை கிராமத்தில் மூன்று சாலை சந்திப்பு பகுதியில் வழிகாட்டு பலகை இல்லாததால் வெளியூர் பயணிகள் வழிதெரியாமல் அவதிப்படுவதாக கோமதிநாயகம் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் வெளியானது. இதன் எதிரொலியாக அங்கு வழிகாட்டு பலகை அமைக்கப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்