பூட்டியே கிடக்கும் ஆரம்ப சுகாதார நிலையம்

Update: 2023-02-22 16:50 GMT

சேலம் மாநகராட்சி 20-வது வார்டு ஆண்டிப்பட்டி காலனி பகுதியில் துணை ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதனை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் பயன்படுத்தி வந்தனர். தற்போது இந்த ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த சில ஆண்டுகளாக திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் அவசர மருத்துவ சேவை கூட கிடைக்காமல் பெரிதும் அவதியடைகின்றனர். இதுகுறித்து பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை மீண்டும் திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மணி, ஆண்டிப்பட்டி, சேலம்.

மேலும் செய்திகள்