கடலூர் மாவட்டம் ஶ்ரீமுஷ்னம் ஒன்றியம் எசனூர் கிராமத்தில் இருந்த பயணிகள் நிழற்குடை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்டது. இருப்பினும் தற்போது வரை புதிய நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் பயணிகள் வெயிலிலும், மழையிலும் நின்று பஸ் ஏறிச்செல்கின்றனர். எனவே புதிய பயணிகள் நிழற்குடை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.