கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

Update: 2023-02-22 12:24 GMT
திருச்செந்தூர் அருகே நத்தக்குளம் கிராமத்தில் இருந்து சீனந்தோப்பு வழியாக ஆறுமுகநேரிக்கு செல்லும் வகையில் இணைப்பு சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. சுமார் 6 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த சாலையில் பெரும்பாலான பணிகள் நிறைவுற்ற நிலையில் சீனந்தோப்பு பகுதியில் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை அமைக்காமல் பல மாதங்களாக பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாலை அமைக்கும் பணியை விரைந்து நிறைவேற்ற அதிகாரிகள் நடவடிக்கை வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்