கரூர் மாவட்டம், குந்தாணிபாளையம் நத்தமேட்டில் பழங்கால சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், தேய்பிறை அஷ்டமி மற்றும் பல்வேறு விசேஷங்களும், வருடா வருடம் மகா சிவராத்திரி விழாவும் நடைபெற்று வருகிறது. அதேபோல் முக்கிய விசேஷ நாட்களில் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்று வருகிறது. இந்த கோவிலில் பழங்கால சிற்பங்களும், சிலைகளும் உள்ளன. ஆனால் இந்த கோவிலுக்கு சுற்றுச்சுவர் இல்லை. இதனால் பழங்கால சிற்பச்சிலைகள் திருட்டு போகக்கூடிய சூழ்நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.