பொது கழிப்பிடம் வேண்டும்

Update: 2023-02-22 09:05 GMT

தமிழக-கேரள எல்லையில் பந்தலூர் அருகே பாட்டவயல்உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இதனால் வாகன நெருக்கடி மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாக விளங்குகிறது. ஆனால் அந்த பகுதியில் ஒரு பொதுக்கழிப்பிடம் கூட இல்லை. இதனால் அங்கு வந்து செல்லும் பொதுமக்கள் கடும் சிரமம் அடைகின்றனர். குறிப்பாக பெண்கள் படும் அவதியை சொல்லி மாளாது. எனவே விரைவில் பொதுக்கழிப்பிடம் அமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்